இந்தியாவுக்கு 3 முறை அணு ஆயுத மிரட்டல்கள் வந்தன: சிவசங்கர் மேனன்

டெல்லியில் நடைபெற்ற அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
1998-ம் ஆண்டுக்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நாடுகள் மிரட்டி, அரசியல் ரீதியாக அவர்களுக்கு உடன்படச் செய்ய முயற்சித்தன. ஆனால் இந்திய அரசியல் தலைமை உறுதியுடன் இருந்ததால், அந்த நாடுகளின் நோக்கம் நிறைவேறவில்லை. 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுதம் வைத்துள்ள நாடாக பகிரங்கமாக அறிவித்ததும் நமக்கெதிராக வந்து கொண்டிருந்த மறைமுக மிரட்டல்கள் நின்றுவிட்டன.
நிச்சயத்தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலக அரசியல் சூழலில் அணு ஆயுதங்கள் நமக்குப் பாதுகாப்பு அளிப்பதில் உறுதுணையாக இருந்து வருகின்றன. பிற நாடுகள் வைத்துள்ள அணு ஆயுதங்களைக் காட்டி நம்மை மிரட்டுவதையும் பணிய வைக்க முயற்சிப்பதையும் கைவிட செய்துள்ளன. இந்தியா ஒரு அணு ஆயுத நாடு என வெளிப்படையாக அறிவித்ததன் நோக்கம் அந்த அளவில் வெற்றி அடைந்திருக்கிறது . இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்கள் போரில் பயன்படுத்துவதற்கு அல்ல. மற்ற நாடுகள் நம் மீது அவ்வகை ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் தடுக்கவே நாம் அணு ஆயுதங்கள் உருவாக்கியுள்ளோம் என இந்தியா மிகத் தெளிவாக கூறி வந்திருக்கிறது
1974-ம் ஆண்டு நாம் அணு குண்டு சோதனை நடத்தி வெற்றி பெற்றபோதிலும், அந்த வகை ஆயுதங்கள் இல்லாத அமைதி நிறைந்த உலகம் வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தள்ளது. 2010-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, உலகில் அணு ஆயுதங்களே இல்லாத நிலையை அடைய வேண்டுமென்று பேசினார். அப்படியொரு உலக அமைதி நிலையை அடையும்வரை, பிற தேசங்களின் அச்சுறுத்தலிலிருந்து நம் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றார் அவர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications