குஜராத் வன்முறையுடன் அசாம் இனமோதலை ஒப்பிடக்கூடாது: அசாம் முதல்வர் தருண் கோகாய்

Subscribe to Oneindia Tamil

Tarun Gogoi
குவஹாத்தி: குஜராத்தில் மாநில அரசே முன்னின்று நடத்திய கலவரத்தையும் அசாமில் இரு இனத்தவர் இடையேயான மோதலையும் ஒப்பிடக் கூடாது என்று அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:

குஜராத்தில் மாநில அரசே வன்முறையைத் தூண்டிவிட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த மாதங்கள் ஆயின. பல ஆயிரம்பேர் உயிரிழந்தனர். ஆனால் அசாமில் நடந்திருப்பதோ வேறு. இங்கு நிலைமையை ஒரே வாரத்தில் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்.

அசாமில் அண்மையில் நிகழ்ந்த மோதலின் தொடக்கத்தில் மத்திய படைகளை அனுப்புவதில் சிறிது தாமதம் இருந்தது உண்மைதான். அசாம் இனமோதல்களுக்கு சட்ட்விரோத குடியேற்றங்களே காரணம் என்று கண்மூடித்தனமாக பாஜக தலைவர் எல்.கே. அத்வானி கருத்து தெரிவித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்துவிடவில்லை. இரண்டு மாவட்டங்களில்தான் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. அத்வானி உள்துறை அமைச்சராக அத்வானி இருந்தபோது வங்கதேச எல்லையில் வேலிகள் அமைக்க அவர் எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்றார் கோகாய்.

அசாமின் கோக்ராஜர் உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையேயான மோதலால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அசாமைப் போல பிற மாநிலங்களிலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் தங்களது சொந்த மாநிலங்களுக்கும் திரும்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+