நெல்லை-தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு தேசிய விருதையும், மாநில அரசு நல்லாசிரியர் விருதையும் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதில் 4 விருதுகள் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ளது.
தென்காசி மேலகரம் அரசு ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி, நெல்லை பகலால் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணப்பன், குற்றாலம் தனியார் பள்ளி நிர்வாகி பெல், கோவில்பட்டி நாடார் பள்ளி ஆசிரியர் குமுதம் ஆகியோருக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது ஆசிரியர் தினத்தன்று நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.












Click it and Unblock the Notifications