காஞ்சிபுரம் அருகே நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்து: 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Kanchipuram Map
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர்.

ஓசூரில் இருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து காஞ்சிபுரத்தை அடுத்த ராஜகுளம் கிராமத்தை நெருங்கியபோது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பலரும் ஆபத்தான நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இந்த விபத்தால் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+