விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்: 7 பேரின் பதவியை பறிக்கும் முதல்வர்?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறி, மீண்டும் உள்ளே வந்து தனது பலத்தை நிரூபித்துவிட்டார். சசிகலா போயஸ் கார்டனைவிட்டு வெளியே அனுப்பப்பட்டபோது அவருக்கு மிகவும் நெருக்கமாக உள்ள அமைச்சர்களை ஜெயலலிதா அதிரடியாக மாற்றுவார் என தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. மாறாக, பல்வேறு காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி தான் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அமைச்சரவையில் உள்ள பலர் மீது கோஷ்டி பூசல், அதிக வசூல், அடாவடி வசூல், அரசு நலத்திட்டங்களில் அலட்சியம், துறை செயல்பாடுகளில் மைனஸ் என பல்வேறு காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாம். மேலும், சிலர் ஏடா கூட நட்பு காரணமாக சிக்கியுள்ளார்களாம்.
இந்த நிலையில் அமைச்சர்களில் 7 பேரின் இலாகா பறிக்கப்படும் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது. இதனால் பல அமைச்சர்கள் தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.