அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிந்து கிரானைட் நிறுவனம் கட்டிய கட்டிடம் இடித்து தரைமட்டம்
மேலூர்: கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்றான சிந்து கிரானைட் நிறுவனம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் கோடி கிரானைட் கொள்ளை நடந்தேறியிருப்பது தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அதிகாரிகள் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா நேற்று அப்பகுதிகளைப் பார்வையிட்டார். ஓவர் மலை, பஞ்சபாண்டவர் மலை ஆகியவற்றுக்கு அருகே இருந்த ஊரணிகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அந்த ஊரணிகளை மூடிவிட்டு கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சிந்து கிரானைட் நிறுவனத்தினர் கட்டடம் ஒன்றையும் கட்டியிருந்தனர். இதை உடனே இடித்து தரைமட்டமாக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனிடையே திருவாதவூர் பகுதியில் உள்ள சிந்து கிரானைட் நிறுவனத்தில் வெடிபொருட்கள் லாரியில் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சிலர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்த லாரியை அப்படியே மடக்கி கைப்பற்றியது போலீஸ்.












Click it and Unblock the Notifications