2ஜி வழக்கில் வாங்கிக் கட்டியதை சிபல் மறந்துவிட்டார்: பாஜக தாக்கு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பாடம் கற்றுக்கொள்ளாமல் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நஷ்டமே ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் என்று பாஜக ராஜ்யசபை துணை தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஒரு பைசா கூட நஷ்டம் ஏற்படவில்லை என்று கபில் சிபல் தெரிவித்திருப்பது அவர் 2ஜி வழக்கில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. முன்னதாக 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கியதில் அரசுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படவில்லை என்று அவர் கூறி பிறரின் பரிகாசத்திற்கு ஆளானார். தற்போது அதே போன்றே பேசுகிறார்.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்ட நிறுவனங்கள் அரசுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. மேலும் கடந்த 4-5 ஆண்டுகளாக சுரங்க வேலைகள் நடைபெறாததால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கபில் சிபலின் கருத்து நிலக்கரி ஊழல் குறித்து அரசு விவாதத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications