பெல்ஜியம் நாட்டின் 2வது துணை தூதரகம் சென்னையில் அமைக்க திட்டம்!
சென்னை: இந்தியாவில் தனது 2வது துணை தூதரகத்தை அடுத்த ஆண்டு சென்னையில் துவங்க பெல்ஜியம் அரசு திட்டமிட்டுள்ளதாக, அந்நாட்டின் துணை தூதர் கார்ல் வான் டென் போஸ்ச் தெரிவித்தார்.
பெல்ஜியம் நாட்டின் தூதரகம் டெல்லியில் அமைந்துள்ளது. மேலும் விசா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மும்பையில் துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இருந்து விசா விண்ணப்பங்கள் வருவதால், சென்னையில் 2வது துணை தூதரகத்தை துவங்க பெல்ஜியம் அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பெல்ஜியம் நாட்டு துணை தூதர் கார்ல் வான் டென் போஸ்ச் கூறியதாவது,
சென்னையில் 2வது துணை தூதரகத்தை துவங்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெல்ஜியம் நாட்டு துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் டிதியர் ரேய்ன்டர்ஸ் ஆகியோர் அதிக ஆர்வமாக உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் அனைத்தும், மும்பையில் உள்ள துணை தூதரகம் மூலம் கையாளப்படுகிறது. எனவே மும்பை துணை தூதரகத்தின் வேலை பளுவை குறைக்கும் வகையில், சென்னையில் 2வது துணை தூதரகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வர உள்ள பெல்ஜியம் இளவரசர் பிலிப்பி, சென்னையில் துவக்கப்படும் புதிய துணை தூதரகத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
இரு நாடுகளுக்கு இடையிலான 80 சதவீதம் வர்த்தகம் வைர வியாபாரம் மூலம் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள வியாபாரிகள், பெல்ஜியத்திற்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். தற்போது பெல்ஜியத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் 120 பெல்ஜியத்தை சேர்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications