ஜியோன் பள்ளி தாளாளர் விஜயன், ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன்

மாணவி ஸ்ருதி, கடந்த மாதம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே பள்ளி பேருந்தில் இருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து இறந்து போனாள். இதையடுத்து பொதுமக்கள் அந்தப் பள்ளிப் பேருந்தை தீவைத்துக் கொளுத்தினர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர் விஜயன், அவரது தம்பிகள் பால்ராஜ், ரவி, டிரைவர் சீமான், ஆர்டிஓ அலுவலக அதிகாரி உள்ளிட்டோர் கைதானார்கள்.
இவர்களில் விஜயனின் ஜாமீன் மனு மட்டும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. கடைசியாக சென்னை உயர்நீதிமன்றமும் விஜயனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.
விஜயனின் சகோதரர் பால்ராஜ், பஸ் டிரைவர் சீமான், பஸ் பராமரிப்பாளரும், விஜயனின் இன்னொரு தம்பியுமான ரவி ஆகியோருக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து விஜயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக்கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
பள்ளி தாளாளர் விஜயன், மாணவி ஸ்ருதியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் மோட்டார் ஆய்வாளர் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இருவரும் திருச்சியில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேப்பியாருக்கும் ஜாமீன்
இதேபோல ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் மைதானம் கட்டும்போது கட்டடம் இடிந்து விழுந்ததில், 10 பேர் உயிரிழந்த வழக்கில், ஜேப்பியாருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கல்லூரி அதிபர் ஜேப்பியாரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்தார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவிலில் 4 வாரங்கள் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications