நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மவுனத்தையே கடைபிடிப்பேன்: பிரதமர் மன்மோகன்சிங்

Subscribe to Oneindia Tamil

Mmanmohan singh
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மவுனத்தையே தாம் கடைபிடிக்கப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

5 ஆண்டுகள் ஆட்சி நடத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மக்கள் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை மதித்து நாடாளுமன்றத்தை செயல்பட பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை கட்டிக்காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மக்களுக்காக பணியாற்றும் கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது. இது ஜனநாயக விரோத செயல்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. அடுத்த தேர்தல் வரை பாரதிய ஜனதா கட்சிபொறுத்து இருக்க வேண்டும். பிரதமர் பதவியின் கண்ணியத்தை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. இதனால் மவுனத்தைக் கடைபிடிப்பதையே சிறந்ததாக கருதுகிறேன் என்றார் அவர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+