செந்தூரனின் கோரிக்கைக்காக போராட்டம் தொடரும்-உண்ணாவிரதம் இருந்த வைகோ பேட்டி
சென்னை: செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக் கோரி ஈழத் தமிழர் செந்தூரன் முருகன் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். அவரது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை, திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக் கோரி ஈழத்தமிழர் செந்தூரன், கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது கோரிக்கைக்கு ஆதரவாக சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போரட்டம் நடைபெறுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அவருடன் அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அப்போது செந்தூரன் முருகனின் கோரிக்கையை நிறைவேறும் வரை, மதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மரண வாசலில் போராடும் செந்தூரனின் உயிரை காப்பாற்றவும், சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், கடந்த 27ம் தேதி முதல் மதிமுக தரப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
உலகில் வேறெந்த நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் சென்றாலும் அடைக்கலம் கொடுக்கின்றனர். ஆனால் சொந்த நாடான தமிழகத்திற்கு வரும் ஈழத்தமிழர்கள் அகதிகள் என்ற பெயரில் முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்த பொய் வழக்குகளை போட்டு இலங்கை அகதிகளை கைது செய்கின்றனர்.
இதேபோல செங்கல்பட்டு முகாமில் இருந்த செந்தூரன் மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கேரளாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் சொந்த ஜாமீனில் வெளியே வந்த அவரை, தற்போது செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளனர்.
2 அரசு மருத்துவர்கள் மூலம் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ததில், 23 பேருக்கு மனஅழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், எந்த செய்தியும் வெளியே வரவில்லை.
செந்தூரன் 26 நாட்களாக உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார். இதில் 12 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். எனவே செந்தூரனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை மதிமுகவின் போராட்டம் தொடரும்.
குன்னூரில் உள்ள வெலிங்டனில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு கடந்த மே 17ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும், மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ, ராணுவ பயிற்சி அளிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனை என்று தெரிவித்துள்ளார்.
இது அவரது சொந்த கருத்து அல்ல. காங்கிரஸ் தலைவி சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் குரல்கள் ஆகும். இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் சிங்கள ராணுவ வீரர்களை உடனடியாக நாட்டை வி்ட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications