மதுரையில் குஷ்பு கூட்டத்தைப் புறக்கணித்த மு.க. அழகிரி ஆதரவாளர்கள் 12 பேருக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் நடிகை குஷ்பு கலந்து கொண்ட டெசோ மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் 12 பேருக்கு திமுக தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் மற்றும் பொதுக்கூட்டத்தை மு.க.அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக அப்போது அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைமை. இதில் அவைத்தலைவராக இருந்த இசக்கி முத்து என்பவர் கொடுத்த பதிலை ஏற்காமல் அவரை கட்சியைவிட்டே நீக்கியது திமுக. மற்றவர்களின் விளக்கத்தை ஏற்றது.

இந்நிலையில் கடந்த 23-ந் தேதி மதுரையில் குஷ்பு கலந்து கொண்ட டெசோ மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனையும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக தற்போது 12 திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நோட்டீசில், மதுரையில் குஷ்பு கலந்து கொண்ட தி.மு.க. டெசோ மாநாடு விளக்க பொதுக் கூட்டம் தொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், ஒட்டப்பட்ட சுவரொ ட்டிகள் போன்ற வற்றில் உங்கள் பெயர் இடம் பெற்று இருந்தன. ஆனால் கூட்டத்துக்கு வரவில்லை. இதற்கான காரணத்தை ஒரு வாரத்துக்குள் தலை மைக்கு தெரிவிக்க வில்லை என்றால் கட்சி கட்டுப் பாட்டை மீறியதாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திமுகவில் புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+