நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: சுஷ்மா ஸ்வராஜ்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முழுவதையும் ரத்து செய்துவிட்டு ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பாஜக முதல்வர்களுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. யாரும் யாருக்கும் பரிந்துரைக்கவுமில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விளக்கம் ஏற்புடையது அல்ல. எங்களது நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
ஆனால் மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால், பாஜக கூறுவதைப் போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட முடியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications