மீனவர்கள் தாக்கப்படுவதாக சொல்லப்படுவது சித்தரிப்பு- ஞானதேசியகனின் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
கடலூர்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டுவருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:
ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை அடிக்கடி நடைபெறும் பிரச்சனையாக சித்தரித்துக் காட்டப்படுகிறது. போனவாரம் செய்தித்தாளில் நான் படித்ததை சொல்கிறேன். ஒரு படகில் 8 பேர் வீதம் 500 படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் இலங்கை அருகிலோ அல்லது எல்லையைத் தாண்டியோ மீன்பிடிக்கப் போகிறார்கள். அவர்கள் போகுமிடம் குறித்து பின்னர் பேசலாம். அப்படி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படகில் உள்ள ஐந்தாறு மீனவர்களை இலங்கை படகு வந்து தாக்கியதாக செய்தி வருகிறது. அப்போது மற்ற படகுகள் ...500 படகுகளில் இருந்த மற்ற மீனவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? உண்மை சம்பவம் என்ன என்பதை நாம் விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
அப்பாடியோ! ஞானதேசிகனின் ஆராய்ச்சி மிகப் பெரியதுதான்!












Click it and Unblock the Notifications