ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வருவேன் என்பதா? சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் இல்ல திருமண விழா புளியங்குடியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,
மதிமுக இனி வரும் காலங்களில் கவனமாக அடி எடுத்து வைப்பதுடன் ஒவ்வொரு முடிவும் வெற்றிகரமாக அமைந்திடும் வகையில் செயல்படும். இனி மதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் இப்பொழுதே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள். 2014ம் ஆண்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சியை பலப்படுத்த வேண்டும். தென்காசி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.
பாஜவை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள புத்தா 2060வது விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் செய்தால் அக்கட்சியின் மீதும் எங்களது வெறுப்பினை காட்ட வேண்டிய சூழல் உருவாகும். இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் போராட்டம் நடத்தினால் என்னையும் அழையுங்கள் வருகிறேன் என்று கூறிய ஜஸ்வந்த சிங் உள்ளிட்ட பல நல்ல தலைவர்கள் உள்ள நிலையில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வருவதாகக் கூறிய சுஷ்மாவை எச்சரிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications