ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

அறிவாலயத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறதே?
பதில்: அந்த கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அவர் வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
கேள்வி: இதற்காக போராட்டம் நடத்துவீர்களா?
பதில்: போராட்டம் நடத்தும் முடிவு எதுவும் இல்லை.
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து?
பதில்: இதே ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் தானே? போர் என்றால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இலங்கை போர் நடந்தபோது சொன்னவர்தானே. அவருக்கு இலங்கை தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications