நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு இப்போதைக்கு ரத்து செய்யப்பட மாட்டாது: பிரதமர் மன்மோகன் சிங்

நாடு முழுவதும் முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் உடனே பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சியான பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்,
142 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை ஏற்று உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய முடியாது இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க நான் தயாராக உள்ளேன். இது தொடர்பான பாஜகவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன். ஆனால் சுரங்க ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சிபிஐ அதிகாரிகளும், அமைச்சகங்களுக்கிடையேயான குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. அந்த குழு தனது அறிக்கையை வரும் 15ம் தேதி சமர்பிக்கிறது. அந்த அறிக்கையை பார்த்த பிறகே சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications