மனைவியை அபகரித்து விட்டார்... ஜெ. பேரவை பிரமுகர் மீது முத்துச்செல்வி எம்.எல்.ஏவின் கணவர் புகார்
சங்கரன்கோவில்: பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'அம்மா'வை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏ முத்துச்செல்வி இன்று சர்ச்சை நாயகியாக மாறி வருகிறார். தனது மனைவியையும்

ஒரு நேரத்தில் அதிமுகவினர் மத்தியில் பெரும் சாதனையாளராகப் பார்க்கப்பட்ட முத்துச் செல்வியைச் சுற்றி இன்று நிறைய செய்திகள்...அதற்கான விடைகள்தான் தெரியவில்லை.
முத்துச்செல்வியின் கணவர் அதிமுக தலைமைக்கு ஒரு புகாரைத் தட்டி விட்டுள்ளார். அவரை வைத்து சில மாதங்களுக்கு முன்பு மறைமுகமாக இன்னொரு சர்ச்சையும் வந்தது. ஆனால் தற்போது புதிதாக எழுந்துள்ள இந்த இரண்டு சர்ச்சைகளாலும் முத்துச்செல்வியைச் சுற்றி கருமேகம் படர ஆரம்பித்துள்ளதாம்.
முத்துச் செல்வியின் கணவர் பெயர் முத்து மாரியப்பன். இவருக்கும், முத்துச்செல்விக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்திலிருந்தே பல்லடத்தில் வேலை பார்த்து வருகிறார் முத்துமாரியப்பன். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக முன்பு இருந்த முத்துச் செல்வி, அதற்கு முன்புவரை தனது கணவருடன்தான் வசித்து வந்தார்.
நகராட்சித் தலைவரான பின்னர் அவர் மட்டும் சங்கரன்கோவிலுக்கு இடம் பெயர்ந்து வந்தார். முத்துமாரியப்பன் தொடர்ந்து பல்லடத்திலேயே இருந்து வந்தார்.
இப்போது எம்.எல்.ஏவாக மாறிய பின்னர் முத்துச் செல்விக்கும், முத்து மாரியப்பனுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விட்டதாம். இந்த நிலையில்தான் பகீர் புகார் ஒன்றை அதிமுக தலைமையிடம் கொண்டு சென்றுள்ளார் முத்து மாரியப்பன்.
அதாவது, என் மனைவி முத்துச்செல்வியையும் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அப்துல் கனி பிரித்துவிட்டார் என்று புகார் கூறியுள்ளார் முத்துமாரியப்பன்.
அப்துல் கனி என்பவர் மறைந்த முன்னாள் அமைச்சரும், சங்கரன்கோவில் தொகுதியில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்தவருமான கருப்பசாமியிடம் பி.ஏவாக இருந்தவர். இன்று ஜெயலலிதா பேரவையில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவரை நோக்கித்தான் தனது குற்றச்சாட்டை வைத்துள்ளார் முத்து மாரியப்பன்.
''என்னை சிக்கலில் மாட்ட விடப் பார்க்கிறார்கள்...''
இந்தப் புகார் குறித்து அப்துல் கனி கூறுகையில், என்னைத் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி விடப் பார்க்கிறார்கள். நான் யார் விஷயத்திலும் குறுக்கிடவில்லை. முத்துமாரியப்பன் புகாரில் உண்மை இல்லை என்று கூறுகிறார்.
அம்மா என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ... சங்கரன்கோவில் வாசிகளின் ஒரே கவலை இதுதான்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications