ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: வரும் 10- ந் தேதி முதல் ஸ்ரீவத்சாவை குறுக்கு விசாரணை செய்கிறார் ஆ.ராசா
Subscribe to Oneindia Tamil

தொலைத்தொடர்புத் துறையில் துணை இயக்குநராகவும் ராசாவின் செயலராகவும் பணியாற்றியவர் ஏ.கே.ஸ்ரீவத்சவா. இவரிடம் ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பல்வா தரப்பு குறுக்கு விசாரணை செய்தது முடிவடைந்த நிலையில் தம்மை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி ஆ.ராசா நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீது இன்று விசாரணைக்கு வந்த போது ஆ. ராசா, ஸ்ரீவத்சாவை குறுக்கை விசாரணை செய்ய அவகாசம் தேவை என்றும் தமது வழக்கறிஞர் சுஷில்குமார் இந்த வாரம் நீதிமன்றத்துக்கு வர இயலாத நிலை இருப்பதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து வரும் 10-ந் தேதி முதல் ஸ்ரீவத்சாவிடம் குறுக்கு விசாரணை செய்யலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications