நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. நூழிலையில் விபத்து தவிர்ப்பு.. குஜராத் ஏர்போர்ட்டில் பரபரத்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், எந்த விமானத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. விமான நிலையத்தின் டேக்சிவே பகுதியில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது போல வந்ததை பார்த்த பயணிகள் பதைபதைப்புக்கு உள்ளாகினர். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் எப்போதும் பிசியாக இருப்பதை பார்க்க முடியும். 24 மணி நேரமும் விமானங்கள் வருகை தருவதும், புறப்படுவதும் என பரபரப்பாக காணப்படும் இந்த விமான நிலையத்தில் நேற்று இரவு நூழிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளை பதற வைத்த இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

Air India Jet Takes Wrong Turn at Ahmedabad Airport Comes Face-to-Face With IndiGo Flight
Photo Credit:

நேருக்கு நேர் வந்த விமானங்கள்

மும்பையில் இருந்து நேற்று மாலை 6.30 மணிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அகமதாபாத் வந்தது. இந்த விமானம் ரன்வேயில் இருந்து, விமாங்கள் நிறுத்தி வைக்கப்படும் டேக்சிவே பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தவறான திசையில் விமானம் திரும்பியது. அதேநேரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மும்பை செல்வதற்காக அதே டேக்சிவே பகுதியில் வந்துகொண்டு இருந்தது.

இரு விமானங்களும் நேருக்கு நேராக வந்ததால் ஏர்போர்ட்டில் பர்பரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானங்கள் 200 மீட்டர் தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் உடனடியாக செயல்பட்டு அலர்ட் செய்ததுடன், விமானிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியதால், இந்தச் சம்பவம் பெரும் விபத்தாக மாறாமல் தடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பதை பதைத்த பயணிகள்

எந்த விமானத்திற்கும் சேதமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தின் டேக்சிவே பகுதியில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது போல வந்ததை பார்த்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வு காரணமாக விமானம் புறப்படுவதில் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

ஏர் இந்தியாவின் விமானம், ரன்வேயில் இருந்த பணியாளர்களின் உதவியுடன் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிறுத்துமிடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. அதேபோல, இண்டிகோ விமானம் ரன்வேக்கு இழுத்து வரப்பட்டு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வால் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம்

இந்த நிகழ்வு குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறியிருப்பதாவது:- ஏர் இந்தியா விமானம் ஏஐ-2493 என்ற விமானம் மும்பையில் லேண்டிங் ஆனதும் டாக்ஸியிங் செய்தபோது, எதிர்பாராத விதமாக தவறான திசையில் திரும்பியது. பயணிகள் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்துள்ளது.

அதேபோல, இண்டிகோ நிறுவனம் கூறுகையில், "இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ-5160 விமானம் மும்பைக்கு புறப்படுவதற்கான நடைமுறைகள் நடைபெற்று கொண்டு இருந்த போது, இன்னொரு விமானம் அதே பாதையில் நுழைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. விமானம் சிறிது நேரத்தில் பாதுகாப்பாக புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பிடம் ஏர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு விமானங்களும் ஏர் பஸ் A320- மாடல் ஜெட் ஆகும். இந்த விமானங்களில் 150 முதல் 180 பயணிகள் வரை பயணிக்க முடியும். நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+