சேலத்தில் திமுக பிரமுகர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
சேலம்: சேலம் அன்னதானப்படியைச் சேர்ந்த திமுக பிரமுகரான சண்முகம் இன்று காலை மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உழவர் சந்தை வியாபாரிகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தவர் சண்முகம். இன்று காலை வழக்கம் போல சண்முகாநகர் பிரிவு சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு காத்திருந்த ஹெல்மெட் அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் சண்முகநாதனை சரமாரியாகத் தாக்கியிருக்கிறது. அக்கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய சண்முகத்தை பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டியது. ஆனால் விடாது ரத்தி சண்முகத்தை அரிவாளால் வெட்டி சாய்த்தது அந்தக் கும்பல.
கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் அண்ணன் மோகனும் இதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சண்முகம்தான் முக்கிய சாட்சி. தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மோகனை வெட்டிக் கொலை செய்த அதே கும்பல்தான் சாட்சியாக இருக்கும் சண்முகத்தையும் போட்டுத் தள்ளியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications