அனுபவமற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர்களால் பட்டாசு விபத்து: அதிர்ச்சி தகவல்
சிவகாசி: பட்டாசுத் தொழிலில் சிறிதும் அனுபவமற்ற வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்தியதாலேயே பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாம் தொடங்கி, மேற்குவங்கம், ஒரிஸா, பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கட்டடத் தொழிலுக்காகவும், ஓட்டல்கள், சிறு தொழிற்சாலைகளில் பணி புரியவும் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது சிவகாசி நகரைச்சுற்றியும் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுக்கணக்கில் பட்டாசுத் தொழிலில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே மருந்து கலவைப் பற்றி ஓரளவிற்காவது தெரியும். ஆனால் மொழியே தெரியாத நிலையில் எந்த வித அனுபவமும் இன்றி உள்ள வடமாநிலத்தவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தவறான முறையில் மருந்து கலவைகளை செய்வதாலேயே வெடி விபத்துகள் ஏற்படுவதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதலிபட்டி ஒம்சக்தி தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகியிருக்கிறார். அவரது உடலை பெற்றுச் செல்வதற்குக் கூட யாரும் இல்லாத காரணத்தினால் சிவகாசியிலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் குறைந்த ஊதியத்திற்காகவும், பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற ஆபத்தான பணியில் ஈடுபடுத்துகின்றனர் இவர்களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள் யார் என்பது பற்றியும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களைப் பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications