Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1989ல் தொடங்கிய கூடங்குளம் போராட்டம்.. முதல் முறையாக நடந்த வன்முறை, தடியடி!

Subscribe to Oneindia Tamil

Kudankulam Protest
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து கடந்த 1989ம் ஆண்டு முதல் பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடந்து வந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போதுதான் முதல் முறையாக வன்முறை வெடித்து தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு வரை போயுள்ளது.

கடந்த 1988ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய சோவியத் யூனியன் அதிபரான கோர்பசேவுக்கும் இடையே கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பது தொடர்பான உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை அமைத்துத் தர ரஷ்யா ஒப்புக் கொண்டது.

இருப்பினும் சோவியத் யூனியன் 1991ம் ஆண்டு உடைந்து சிதறியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவில் நிலவிய அரசியல், சமூக குழப்பங்களாலும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 1989ம் ஆண்டே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் எழத் தொடங்கின. ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவிலேயே போராட்டங்கள் இருந்தன. இதனால் அரசுகள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வப்போது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் என்றுதான் போராட்டங்கள் இருந்து வந்தன. இதனால் போராட்டங்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஏன் இது பெரிய செய்தியாகக் கூட மீடியாக்களில் இடம் பெறவில்லை.

2001ம் ஆண்டுதான் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடக்க ஆரம்பித்தன. அதன் பின்னர்தான் போராட்டங்கள் சற்று வலுப் பெறத் தொடங்கின. 2002ம் ஆண்டு அப்போதைய சுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவு தலைமையில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடந்தபோதுதான் கூடங்குளம் குறித்து சற்றே சிறிய அளவிலான விழிப்புணர்வு பிற பகுதிகளில் ஏற்பட்டது.

இந்த நிலையில், 2011ம் ஆண்டு உதயக்குமார் தலைமையிலான அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளம் போராட்டத்தை புதிய களத்திற்குக் கொண்டு சென்றது. இடிந்தகரையில் முகாமிட்டு அவர்கள் தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

உதயக்குமார் குழுவினரின் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால் புதிய பரபரப்பும் ஏற்பட்டது. உதயக்குமாருக்கு முன்பு வரை நடந்த போராட்டங்களின்போது எந்தவிதமான வன்முறையும் வெடித்ததில்லை. போலீஸார் பலத்தைப் பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் இன்று முதல் முறையாக கூடங்குளம் மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும் அளவுக்கு நிலைமை போயுள்ளது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+