1989ல் தொடங்கிய கூடங்குளம் போராட்டம்.. முதல் முறையாக நடந்த வன்முறை, தடியடி!

கடந்த 1988ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய சோவியத் யூனியன் அதிபரான கோர்பசேவுக்கும் இடையே கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பது தொடர்பான உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை அமைத்துத் தர ரஷ்யா ஒப்புக் கொண்டது.
இருப்பினும் சோவியத் யூனியன் 1991ம் ஆண்டு உடைந்து சிதறியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவில் நிலவிய அரசியல், சமூக குழப்பங்களாலும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 1989ம் ஆண்டே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் எழத் தொடங்கின. ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவிலேயே போராட்டங்கள் இருந்தன. இதனால் அரசுகள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வப்போது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் என்றுதான் போராட்டங்கள் இருந்து வந்தன. இதனால் போராட்டங்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஏன் இது பெரிய செய்தியாகக் கூட மீடியாக்களில் இடம் பெறவில்லை.
2001ம் ஆண்டுதான் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடக்க ஆரம்பித்தன. அதன் பின்னர்தான் போராட்டங்கள் சற்று வலுப் பெறத் தொடங்கின. 2002ம் ஆண்டு அப்போதைய சுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவு தலைமையில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடந்தபோதுதான் கூடங்குளம் குறித்து சற்றே சிறிய அளவிலான விழிப்புணர்வு பிற பகுதிகளில் ஏற்பட்டது.
இந்த நிலையில், 2011ம் ஆண்டு உதயக்குமார் தலைமையிலான அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளம் போராட்டத்தை புதிய களத்திற்குக் கொண்டு சென்றது. இடிந்தகரையில் முகாமிட்டு அவர்கள் தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியது.
உதயக்குமார் குழுவினரின் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால் புதிய பரபரப்பும் ஏற்பட்டது. உதயக்குமாருக்கு முன்பு வரை நடந்த போராட்டங்களின்போது எந்தவிதமான வன்முறையும் வெடித்ததில்லை. போலீஸார் பலத்தைப் பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் இன்று முதல் முறையாக கூடங்குளம் மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும் அளவுக்கு நிலைமை போயுள்ளது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications