போலீஸாரை வலை வீசி கடலுக்குள் இழுத்தத் தள்ள திட்டமிட்ட போராட்டக்காரர்கள் - பரபரப்புத் தகவல்
கலவர பூமியாகியுள்ள கூடங்குளத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு காரணமாக பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இதுவரை இல்லாத அளவு இன்று கூடங்குளம் போராட்டத்தில் வன்முறை வெடித்து விட்டது. நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கில் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலோரத்தில் கூடிய மக்களைக் கலைக்காமல் போலீஸார் இன்று காலை வரை அமைதி காத்தனர். இன்று காலைக்கு மேல்தான் போலீஸார் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில் போலீஸாரைக் குறி வைத்து பல திட்டங்களுடன் போராட்டக்காரர்கள் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று இரவே 40க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளை கடலோரத்தில் நிறுத்தி வைக்க ஆரம்பித்தனர். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நாட்டு வெடிகுண்டுகளுடன் அவர்கள் தயார் நிலையில் இருக்கலாம் என்று சந்தேகித்தோம்.
இதையடுத்து அந்தப் படகுகளை நாங்கள் சோதனையிட்டபோது அதில் மீன்பிடி வலைகள் நிறைய இருந்தது. இது எங்களைக் குழப்பியது. இதையடுத்து சில மீனவர்களைப் பிடித்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் கூறிய தகவல் எங்களை திடுக்கிட வைத்தது.
போலீஸார் தடியடியோ அல்லது துப்பாக்கிச் சூடோ நடத்தினால் போலீஸாரை கடலோரத்திற்கு வரவழைத்து பின்னர் படகிலிருந்து மீன்பிடி வலைகளை வீசி போலீஸாரை கடலுக்குள் இழுத்துத் தள்ளி விடும் திட்டத்துடன் போராட்டக்காரர்கள் இருந்தது அவர்கள் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மீன்பிடி வலைகளை நாங்கள் கைப்பற்றினோம். இருப்பினும் பல படகுகளை மீனவர்களே கடலுக்குள் கொண்டு போய் விட்டனர் என்றனர்.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது













Click it and Unblock the Notifications