மாட்டுக்கொட்டகைக்கு தீவைப்பு: 11 ஆடுகள் உடல் கருகி பலி, கன்றுக்குட்டியின் கண்கள் கருகின
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே மர்ம நபர்கள் மாட்டுக்கொட்டகைக்கு தீ வைத்ததில் 11 ஆடுகள் உடல் கருகி பலியாகின. மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியின் கண்கள் கருகிவிட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள டி.குருபரப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி கதிரப்பா (55). அவர் தனது வீட்டுக்கு அருகே மாட்டு கொட்டகை வைத்து அதில் 11 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். நேற்று ஆடுகளையும், கன்றுக்குட்டியையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு மீண்டும் அவைகளை கொட்டகையில் அடைத்தார்.
நள்ளிரவு நேரத்தில் யாரோ அவரது கொட்டகைக்கு தீ வைத்துவிட்டனர். மளமளவென பரவிய தீயில் 11 ஆடுகளகும் உடல் கருகி பலியாகின. கன்றுக்குட்டியின் 2 கண்களும் கருகி அது அலறித் துடித்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது கன்றுக்குட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொன்று சென்றார்.
பின்னர் இது குறித்து அவர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications