கூடங்குளம் கலவரத்தில் 20 பெண் போலீஸாருக்கு காயம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கூடங்குளத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தின்போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் 20 பெண் போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் நேற்று பெரும் கலவரமாகி விட்டது. அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த கடும் மோதலில் தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர் போலீஸார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்கள் குறித்த விவரம் தெரியவில்லை. ஆனால் போலீஸ் தரப்பில் 20 பெண் போலீஸார் உள்ளிட்ட 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 பெண் போலீஸாரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தவிர கோவை சிறப்பு அதிரடிப்படை போலீஸ்காரர் பிரதீஷ் மற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications