இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி- 10,000 போலீசார் குவிப்பு
பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தின விழா இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சந்தைப்பேட்டை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்த அரசு நேரம் ஒதுக்கியது. அதன்படி காலை 7 மணிக்கு விழா துவங்கியவுடன் அவரது சொந்த ஊரான செல்லூர் மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தலைமையில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு தேவேந்திர பண்பாட்டுக் கழகம் தலைவர் அழகர்சாமி தலைமையில் வந்தவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் கார்மேகம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முனியசாமி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட செயலாளர் ரங்கநாதன் மற்றும் முத்துசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகவேல், திசைவீரன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், நகர செயலாளர் சேதுகருணாநிதி, நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், இளைஞர் அணி துரைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பழனி ஆகியோரும், மக்கள் விடுதலை கட்சி சார்பில் தலைவர் முருகவேல் ராஜன், மதிமுக சார்பில் எம்.பி.கணேசமூர்த்தி மற்றும் இமானுவேல்சேகரன் மகள்கள் மேரி வசந்தாராணி, பாபின் விஜயராணி, சுந்தரி பிரபாராணி, ஜான்சிராணி ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இவர்கள் தவிர ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். கடந்த ஆண்டு நினைவு நாள் அன்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய தெருக்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதட்டமான இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
15க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர். 10 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தி அஞ்சலி செலுத்த வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications