நாடாளுமன்றம் முடக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை: இல.கணேசன் அதிரடி
சென்னை: நிலக்கரி சுரங்க முறைகேட்டிற்காக நாடாளுமன்றத்தை பாஜக முடக்கியதில் எந்த தவறும் இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வங்கியில் ரூ.200 முறைகேடு நடந்திருந்தாலே அதை கண்டுபிடிக்க அதிகாரிகள் ரூ.2,000 செலவு செய்கின்றனர். ஒரு முறைகேட்டை கண்டுபிடிக்க முறைகேட்டு தொகையை விட அரசு கூடுதலாக செலவு செய்கிறது.
அதே போல ஒரு கிராமத்தில் ஒருவர் ரூ.15 வரி கட்டவில்லை என்றால் கூட அதை வசூலிக்க அதிகாரிகள் வந்து செல்ல ரூ.500 செலவு செய்யப்படுகிறது. செலவு அதிகம் என்பதற்காக வரியை வாங்காமல் விட்டு விடுவதில்லை.
ஆனால் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ரூ.1,80,000 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அதனால் தான் நாடாளுமன்றத்தை பாஜக முடக்கியது.
நாடாளுமன்றத்தை முடக்கியதால் ரூ.10 கோடி அல்லது ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுகின்றது. முறைகேடு எவ்வளவாக இருந்தாலும் அதை கண்டுபிடிக்கப் போராடுவதில் எந்த தவறும் இல்லை. தேசத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கூட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதனால் தான் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதில் எந்த தவறும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications