தேமுதிக பிரமுகர் கள்ளத்தொடர்பு: மகன்-மகளை எரித்து கொன்ற மனைவி தீக்குளித்து பலி
திருத்தணி: திருத்தணி அருகே தேமுதிக பிரமுகர் ஒருவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்து மனமுடைந்த அவரது மனைவி, 2 குழந்தைகளை எரித்து கொலை செய்துவி்ட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இ.எம்.ஆர்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் ஆர்.கே.பேட்டை ஒன்றிய தேமுதிக அவைத் தலைவராக உள்ளார். இவருக்கு ரேகா(24) என்ற மனைவியும், லாவண்யா(5) என்ற மகளும், ராகுல்(4) என்ற மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் ரவிக்கு அதே பகுதியில் வசித்து வந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரேகா, கணவனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். ஆனால் அதை கண்டுக் கொள்ளாத ரவி, தனது கள்ளத்தொடர்பை தொடர்ந்த வந்ததாக தெரிகிறது. இதனால் ரேகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ரவியின் வீ்ட்டு ஜன்னல்களில் இருந்து அதிகளவில் புகை வெளியே வந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், ஓடி வந்து பார்த்த போது ரேகாவும், அவரது 2 குழந்தைகளும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
3 பேரையும் மீட்ட அப்பகுதியினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதிகளவில் தீக்காயமடைந்திருந்த 3 பேரும் அதற்குள் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் நசீர் முகமது சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். மனைவியும், இரு குழந்தைகளும் பலியான நிலையில் ரவி இன்னும் பார்க்க வரவில்லை.
எனவே தலைமறைவாக உள்ள ரவி, 3 பேரின் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications