பாஜகவின் பிரதமர் வேட்பாளர்... 'ஒன் இந்தியா' வாசகர்கள் ஆதரவு மோடிக்கு!

ஒன்இந்தியாவின் தமிழ் இணையதளம் சார்பில் அரசியல், நிர்வாக அனுபவ அடிப்படையில் பாஜக கூட்டணியில் பிரதமர் பதவிக்கு மிகவும் ஏற்றவர் யார்?என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் நரேந்திர மோடி, அத்வானி, சுஷ்மா சுவராஜ், நிதீஷ் குமார், அருண் ஜேட்லி ஆகியோரது பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கேக் கிடைத்துள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி வரை வாக்களித்திருந்த மொத்தம் 17,269 பேரில், மோடிக்கு 71 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது மொத்தம் 12,457 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். 2வது இடத்தில் அத்வானி வருகிறார். அவருக்கு வெறும் 10 சதவீத வாக்குகளே கிடைத்தன.
3வது இடத்தில் ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் 9 சதவீத ஆதரவுடனும், 4வது இடத்தில் சுஷ்மா சுவராஜ் 4.7 சதவீத ஆதரவுடனும், 5வது இடத்தில் அருண் ஜேட்லி 3.7 சதவீத ஆதரவுடனும் உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படுவது என்பது எளிதானது அல்ல என்பதும் முக்கியமானது. காரணம், நிதீஷ் குமார் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மோடியை வேட்பாளராக அறிவித்தால் கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என்றும் அவர் ஏற்கனவே எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 64 சதவீதம் பேரின் ஆதரவு நிதீஷ் குமாருக்குக் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications