டீசல் விலை உயர்வு நியாயமானதே... முன்னேற்றப் பாதைக்கு முதல் அடி! - மன்மோகன் சிங்

திட்டக் குழு ஆணையத்தின் 12வது ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
11-வது ஐந்தாண்டு திட்ட முடிவில் நாம் குறிப்பிடத்தக்க சில இலக்குகளை அடைந்திருக்கிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆண்டு சராசரி என்பது 7.9 விழுக்காடாக இருகிறது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சர்வதேச பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2.4 விழுக்காடு வளர்ச்சியாக இருந்த வேளாண் துறையானது 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 3.3 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
கடும் சவால்கள்
இது 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நல்ல அம்சமாக இருந்தாலும் 12-வது ஐந்தாண்டுத் திட்டமானது கடுமையான சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தொடங்குகிறது.
இன்றைக்கு வலுவான வளர்ச்சி, செயலின்மை மற்றும் கொள்கை முட்டுக்கட்டைகள் என சிக்கலான மூன்று விஷயங்களில் நாட்டின் பொருளாதாரம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த சவாலிலிருந்து நாம் வெளியில் வந்தாக வேண்டும்.
12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதமானது 9 விழுக்காட்டுக்குப் பதிலாக 8.2 ஆக குறைத்திருக்கிறோம்.
உள்கட்டமைப்புக்கு ஒரு ட்ரில்லியன்
நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது உடனடிப் பணிகளாகும். உள்கட்டமைப்புத் துறைகளின் முடக்கம்தான் இதர துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் போது முதலீட்டுக்கான சூழலும் அதிகரிக்கும். இந்தத் துறையில் டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலாவது 6வது மாத முடிவில் உள்கட்டமைப்பு அமைச்சகங்களின் செயல்திட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் ஆராய உள்ளேன். நாம் நிர்ணயித்திருக்கும் 8.2 விழுக்காடு இலக்கை எட்ட முதலீட்டுக்கான சூழலை உருவாக்க வேண்டும். வேளாண் துறை வளர்ச்சியை 4 விழுக்காடு அளவுக்கு உயர்த்த வேண்டும்.
டீசல் விலை உயர்வு சரிதான்
நமது நாட்டின் எரிபொருட்கள் விலையானது சர்வதேச விலைகளுக்கு அப்பால் இருக்கிறது. இதையடுத்து அண்மையில் டீசல் விலை உயர்த்தப்பட்டது என்பது ஒரு சரியான நடவடிக்கைதான். சரியான நேரத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் முடக்கி வைத்தால் நாட்டின் வளர்ச்சி விகிதமானது 6 முதல் 6.5 விழுக்காடு என்பதைவிட மிகக் குறைவான விழுகாட்டை சந்திக்க நேரிடும்.
அன்னிய முதலீடு சரிதான்
12-வது ஐந்தாண்டுத் திட்டமானது 2.9 விழுக்காடு பற்றாக்குறையுடன் இருக்கிறது. இத்தகைய பற்றாக்குறை நிலைமையை சமாளிக்க நாம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தாக வேண்டிய நிலை இருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை நாம் ஈர்ப்பதன் மூலம் நிச்சயமாக நமது பற்றாக்குறை அளவு என்பது கட்டுப்பாட்டுக்குள் வௌவதுடன் கணிசமான பொருளாதார முன்னேற்றத்தையும் எட்ட முடியும்
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பொருளாதார வளர்ச்சி சதவீதத்துக்கு கீழே குறைந்துவிடும் வாய்ப்புள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications