குவாரிக்காக தனியார் சொத்தை மிரட்டி வாங்கியதாக பி.ஆர்.பழனிச்சாமி மீது மேலும் ஒரு புகார்!
கரூர்: கரூரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான சொத்தை கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாக மதுரை எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தோகைமலை கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவர் தனது சொத்துக்களை மீட்டுத் தருமாறு மதுரை கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், எனது மனைவிக்கும் சொந்தமான சொத்துகள், கரூர் மாவட்டம், நாகனுர் கிராமத்தில் உள்ளது. எனக்கும், மனைவிக்கும் சொந்தமான குவாரி உட்பட மொத்தம் 12 ஏக்கர் 42 சென்ட் பகுதியை பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, வண்டல் கரட்டுப்பட்டியில் உள்ள அவரது அக்கா மகன் காந்தி, சண்முகம் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது குடும்பத்தாரையும் மிரட்டி, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கிரயப்பத்திரம் எழுதி வாங்கி கொண்டனர். எனது சொத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
நிலத்திற்காக அவர்கள் கொடுத்த பணத்தை நான் திரும்ப தருகிறேன். எனது சொத்துகளை மீட்டு தர வேண்டும். பி.ஆர்.பழனிச்சாமி, அவரது அக்கா மகன் காந்தி மற்றும் சண்முகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், கரூர் எஸ்.பி. சந்தோஷ்குமார் விசாரித்து வருகிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications