பி. ஆர். பழனிச்சாமி மீது வெடிபொருட்கள் பதுக்கல் வழக்கு பதிவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளையில் ஈடுப்பட்ட பி.ஆர். பழனிச்சாமி மீது வெடிமருந்து பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் ஊராட்சி மட்டங்கிப்பட்டியில் உள்ள ஜி.வி., கிரானைட்ஸ் குவாரியில் உள்ள ரகசிய அறையில் இருந்த பெட்டகத்தில், டெட்டனேட்டர் வயர்கள் மற்றும் வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குவாரி பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரது பட்டா நிலத்தில் செயல்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவர் மீதும், ஜி.வி.கிரானைட்ஸ் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் மீதும் தனியாமங்கலம் வி.ஏ.ஓ., மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications