பர்தாவுக்குள் வைத்து ரூ. 18 லட்சம் நகை, கடத்தல்... பெண் கைது
சென்னை: சிங்கப்பூரிலிருந்து வந்த முஸ்லீம் பெண் தனது பர்தாவுக்குள் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நகைகளை கடத்தி வந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் உம்மா சோயித். 42 வயதான இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரிடம் வெளிநாட்டுப் பொருட்கள் இருக்கிறதா என்று சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவரது பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதையடுத்து அவரது பர்தா மீது அதிகாரிகளின் சந்தேகப் பார்வை படிந்தது. இதையடுத்து பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பர்தாவுக்குள் 520 கிராம் தங்க நகைளை சோயித் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 18 லட்சமாகும்.
இதையடுத்து அப்பெண்மணியை விமான நிலைய போலீஸாரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications