சி.ஆர்.ஆர். குறைப்பால் வீடு, கார் லோன்களுக்கு வட்டி விகிதம் குறைகிறது

வங்கிகளின் ரொக்க கையிருப்பில் கால் சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. இதன் மூலம் வங்கித் துறையில் சுமார் ரூ17 ஆயிரம் கோடி கூடுதல் புழக்கத்தில் இருக்கும் என்று கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது வரக் கூடிய பண்டிகை காலங்களில் பணப்புழக்கம் நெருக்கடியாக இருக்கக் கூடாது என்பதை வைத்தே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலம், வாடிக்கையாளர்களின் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார் யெஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ரானா கபூர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவோ, குறிப்பிட்ட வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. இதேபோல் ஐ.சி.ஐ.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்று ஆக்ஸிஸ் வங்கி ஆகியவையும் டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்திருக்கின்றன. டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் நிலையில் கடன்கள் மீதான வட்டி விகிதமும் குறையும் என்கிறார் ஹெச்.டி.எப்.சி.யின் நிர்வாகி ஆதித்யா பூரி.












Click it and Unblock the Notifications