தூக்குத் தண்டனையை தளர்த்த கோரி கசாப் கருணை மனு- ஜனாதிபதிக்கு அனுப்பினான்

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக ஊடுறுவிய பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று நாட்கள் மும்பையில் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. இந்த கொடூர தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 9 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கசாப் மட்டும் பிடிபட்டான்.
அவனுக்கு மும்பை தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதையடுத்து பாம்பே உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். ஆனால் இந்த அப்பீல் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தளர்த்தி ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளான் கசாப். தற்போது அவன் அடைக்கப்பட்டுள்ள மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் மூலம் இந்த மனு அனுப்பப்பட்டிருக்கிறது.
மும்பை தீவிரவாத சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications