தனி ஆவர்த்தனத்துக்கு தயாராகிறார் அர்விந்த் கெஜிர்வால்- செம கடுப்பில் ஹசாரே
புனே: ஊழக்கு எதிராக இந்தியா அமைப்பில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கும் அவரது ஆதரவாளர்களில் ஒருவரான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான முட்டல் மோதல் பகிரங்மாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
75 வயதான ஹசாரே இன்று தமது இயக்கத்தின் 35 முக்கிய பிரமுகர்களை புனேக்கு அழைத்திருந்தார். அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய ஹசாரே நாளை டெல்லியில் இதேபோல் பல பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, கெஜ்ரிவாலுக்கும் தமது இயக்கத்தினருக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.
ஒருகட்டத்தில் திடீரென, கெஜ்ரிவால் விரும்பினால் தனிக்கட்சித் தொடங்கட்டும். அதுல நாங்க தலையிடலை என்று கூறியவரிடம் கெஜ்ரிவால் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சுதாரிப்பாக பதில் சொன்ன ஹசாரே, இருவரது இலக்கும் ஒன்றுதான். ஆனால் செல்லும் பாதைதான் வேறானது என்றார்.
மேலும் தாம் விரைவில் நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போவதாகவும் ஊழலுக்கு எதிரான தமது இயக்கத்துக்குப் புத்துயிரூட்டப் போவதாகவும் கூறினார்.
களத்துக்கே வரலை.. அதுக்குள்ள "கழக" பாணியில் கலகம்!












Click it and Unblock the Notifications