ராகுல் காந்தி பற்றி பேசக் கூடிய தகுதியற்றவர் மோடி: காங். கண்டனம்
டெல்லி: ராகுல் காந்தியை இன்டர் நேஷனல் தலைவர் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தியைப் பற்றி பேசக் கூடிய தகுதியற்றவர் மோடி. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்தான். இப்போது ராகுல்காந்தியைப் பற்றிய தற்போதைய நிலைப்பாடு குறித்து பின்னர் மோடி உணர்வார் என்றார் அவர்.
பிரதமர் பதவி வேட்பாளர்களாக ராகுல் மற்றும் மோடி இடையே போட்டி இருக்குமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் தரப்பில், மோடி, குஜராத் மாநில தலைவர் ..ராகுல் காந்தியோ தேசியத் தலைவர் என்று கூறியிருந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ராகுல் காந்தி தேசிய தலைவர் மட்டுமல்ல.. இன்டர்நேஷனல் தலைவரும் கூட... அவர் இந்தியாவில் மட்டுமல்ல.. இத்தாலியிலும் கூட போட்டியிட்டு வெல்வார் என்று நக்கலடித்திருந்தார் நரேந்திர மோடி. இதற்கு காங்கிரஸ் தரப்பு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications