காரில் போகும் ஒரு வன்னியனைப் பார்க்க முடியுமா என்று கூறிவிட்டு காரில் சென்ற அன்புமணி
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையை போட்டது வன்னியன். ஆனால் இந்த சாலையில் காரில் போகும் ஒரு வன்னியனைப் பார்க்க முடியுமா என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர். அன்புமணி ராமதாஸ்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக சேலம் செரிரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட பாமகவினர் பிரட்ஸ் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வன்னியர்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராடிய வன்னியர்களில் 21 பேர் உயிர் இழந்தனர். டாக்டர் ராமதாஸ் தலைமையில் 1 வாரம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போலீஸ் தடியடி தாக்குதலில் 21 பேர் பலியானதால் நாம் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டோம். ஆனால் அன்று கருணாநிதியோ வன்னியர் சமுதாயம் உள்பட 108 சமுகத்தை எம்.பி.சி. பட்டியலில் தந்திரமாக சேர்த்துவிட்டார்.
தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையக வாழும் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி ஒதுக்கீடு வேண்டும். ஆனால் தற்போது வெறும் 5 சதவீத ஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நாம் தமிழகத்தை ஆண்ட பரம்பரை. ஆனால் தற்போது ஆண்டிகளாக இருக்கிறோம்.
கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையை போட்டது வன்னியன். ஆனால் இதே சாலையில் காரில் செல்லும் ஒரு வன்னியனைப் பார்க்க முடியுமா என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.












Click it and Unblock the Notifications