எங்க மாத்துனாலும் அதே அஸ்ராதான்.. அதே 'அட்டாக்' அதிரடிதான்!

நெல்லையில் தொடங்கிய அஸ்ராவின் அதிரடி மதுரை, திருப்பூரை அடுத்து தர்மபுரியிலும் தொடர்வதால் பொதுமக்கள் எஸ்.பியின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தான் எஸ்.பி. யாக பொறுப்பேற்கும் மாவட்டங்களில் தனக்கு கீழ் பணியாற்றும் போலீசார் லஞ்சம் வாங்கினால் உடனடியாக ஸ்பாட் சஸ்பென்ட் செய்வது அஸ்ரா கார்க்கின் ஸ்பெசல். இதனை தர்மபுரியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் அங்கு எஸ்.பி ஆக பொறுப்பேற்ற பின்னர் அனுமதியின்றி மது விற்பனை செய்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தல், புதுப்பட சிடி விற்பனைகள் போன்றவை தற்போது மாவட்டத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்ட காவல்துறையில் உள்ள சீர்கேடுகளை முறைப்படுத்தும் விதமாக புகார் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களை அழைத்து அவர்களது குற்றப் பட்டில்களை வாசிக்கிறார். பின்னர் அவர்களுக்கு தண்டனை தரும் விதமாக ஆயுதப்படைக்கு மாற்றப்படுகின்றனர். அழைக்கும் வரை ஆயுதப்பிரிவில் பணியாற்றும்படி அனுப்பி வைக்கிறார்.
இவர்களின் தண்டனைக்கு சமீபத்தில் இலக்கானவர்கள் தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமார் உள்ளிட்ட இரண்டு எஸ்.ஐ. மற்றும் ஐந்து காவலர்கள். இவர்களை ஆயுதப்பிரிவு படைக்கு உடனடியாக மாற்றியுள்ளார்.
இதனால் மாவட்டத்தில் உள்ள மற்ற காவலர்களும் எஸ்.பி. அதிரடி நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போய் உள்ளனர்.எங்கே மாத்துனாலும் என்னோட அதிரடி தொடரும் என்று அஸ்ரா கார்க் சொல்லாமல் சொல்கிறாரோ ?!.












Click it and Unblock the Notifications