பார்ட் டைம் வேலை செய்த நிறுவனத்தின் குளியலறையில் கல்லூரி மாணவி கொலை

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கல்லூரி மாணவி தனியார் நிறுவன குளியலறையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனிதேவி நகரைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் அருணா, அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஓசூரில் உள்ள டிரான்ஸ் இந்தியா கார்ப்பரேஷன் என்ற ஷேர் மார்க்கெட் தொடர்பான நிறுவனத்தில் பார்ட் டைம் வேலையும் செய்து வந்துள்ளார்.

ஓசூர் ரெயின்போ கார்டனில், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ள ஒரு வீட்டில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணி அளவில் மாணவி அருணா, வீட்டில் பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அருணா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அருணா வேலை பார்த்த தனியார் நிறுவன அலுவலகத்தின் குளியல் அறையில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு போலீசார் சென்று பார்த்தபோது மாயமான கல்லூரி அருணாதான் என்பது உறுதியானது. அருணாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற யாரோ ஒருவன்தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+