கடற்படை விமான பீதியால் இறந்த இடிந்தகரை மீனவரின் உடல் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

கூடங்குளம்: இடிந்கரையில் நடந்த போராட்டத்தில் விமானம் சென்றபோது துள்ளி குதித்து அதிர்ச்சியில் பாறையில் இருந்து விழுந்து இறந்த மீனவர் சகாயத்தின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் கொண்டு வரப்பட்டபோது ஏராளமான போலீசாரும் வாகனங்களில் அணி வகுத்து வந்தனர்.

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரியும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் கடந்த 13ம் தேதி இடிந்தகரையில் போராட்டக்குழுவினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது கடற்படைக்கு சொந்தமான விமானம் தாழ்வாக பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. விமானம் ஏற்படுத்திய சத்தத்தால் கடற்கரை பாறையில் நின்று கொண்டிருந்த மீனவர் சகாயம் அதிர்ச்சியில் அங்கிருந்து துள்ளி குதித்தார். அப்போது அவர் பாறையில் மோதி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் உடனடியாக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி காலை இறந்தார்.

சகாயத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சகாயத்தின் இறக்க காரணமான கடற்படை விமானிகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்தனர். பின்னர் அவரது உடலை போலீஸ் பாதுகாப்புடன் இடிந்தகரைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+