கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் மீதான புகார்: போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Selvi and Karunanidhi
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருகன் மீதான புகார் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு சென்னை போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் வி.எம்.ஜோதிமணி. காஞ்சீபுரம் மாவட்டம், தாளம்பூரில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்துக்கான அதிகாரம் (பவர்) தன்னிடம் இருப்பதாகவும், அதை ரூ.5 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கு எனக்கு விற்பனை செய்வதாக 2007-ம் ஆண்டில் உறுதி அளித்தார். அந்த நிலைத்தை வாங்குவதற்கான முன்தொகையாக காசோலை மற்றும் பணமாக ரூ.3.50 கோடியை ஜோதிமணியிடம் கொடுத்தேன். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு என்னை மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக புகார் கொடுத்தும் போலீசாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறியிருதார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆறுமுகசாமி, சம்பந்தப்பட்ட போலீசிடம் மனுதாரர் புகார் கொடுக்க வேண்டும். 21.9.11 அன்று மனுதாரர் கொடுத்த புகாரை தியாகராயநகர் இன்ஸ்பெக்டர் பரிசீலிக்க வேண்டும். மேலும் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்துவிட்டு, சட்டப்படி புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+