கூடங்குளம் போராட்ட வழக்கு: வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜரான உதயகுமார் மனைவி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் 400 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவ்வாறு போராடுபவர்கள் மீது போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் 73வது வழக்கில் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜ், ஜெயக்குமார், முகிலன், அகிலன் உள்பட 3,550 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பெயர் தெரிந்த 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இது தவிர 141வது வழக்கில் உதயகுமார் முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி மீரா 36வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு அவர்கள் உள்பட 36 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு உதயகுமாருக்கு சம்மன் கொடுக்க போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவரது பெற்றோர் சம்மனை வாங்க மறுத்ததால் 141வது வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உதயகுமாரின் மனைவி மீராவிடம் சம்மன் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று வள்ளியூர் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிமன்றத்திற்கு முன்பு ஏராளமானோர் கூடியிருந்ததால் அவர் பின் புறமாக உள்ளே சென்று நீதிபதி பபிதா முன்பு ஆஜரானார்.
உதயகுமார் இன்னும் தலைமறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications