சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு- திரும்பப் பெற ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
டெல்லி: பிரதமரின் வீட்டில் இன்று காலை நடந்த காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தின்போது சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டத்தை திரும்பப் பெறக் கூடாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டத்திற்கு அத்தனை எதிர்க்கட்சிகளும், காங்கிரஸின் பல கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மமதா பானர்ஜியும் கூட இந்தத் திட்டத்திற்கு கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தே கூட்டணியிலிருந்து விலகியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் எக்காராணம் கொண்டும் இந்தத் திட்டத்தை திரும்பப் பெறக் கூடாது என்று இன்றைய கூட்டத்தில் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தின்போது ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அப்போது அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை முழுமையாக திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட அனைவருமே வந்துள்ளனர். அதேசமயம், ஒரு சிலவற்றில் மறு பரிசீலனை செய்யும் வாய்ப்பு இருப்பதை காங்கிரஸ் தரப்பு மறுக்கவில்லை.

இருப்பினும் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டத்தை கண்டிப்பாக திரும்பப் பெறக் கூடாது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக கோரினாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+