மக்களுக்கு வருஷத்துக்கு 6 சிலிண்டர் போதுமா?... மமதா விளாசல்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மமதா பானர்ஜி கூறுகையில் மீடியாக்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது. என்னை பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பு கொண்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக மீடியாக்கள் மூலமாக அறிந்தேன். அது தவறு. பிரதமரோ அல்லது வேறுயாருமோ என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு முடிவை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும். அதில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது என்பது அபத்தமானது. வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் ஒரு குடும்பத்துக்குப் போதுமா...இந்த நாட்டில் உள்ள ஏழைகள் சாப்பிடுவதே கிடையாது, அவர்கள் பட்டினியில்தான் வாடி வருகின்றனர்.. காங்கிரஸ் தலைவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்றார் கோபமாக.
எதிர்க்கட்சிகள் நாளை அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு எனக்கு பந்த் அரசியலில் நம்பிக்கை இல்லை. அதனால் எந்த லாபமும் யாருக்கும் கிடைக்காது என்றார் மமதா.












Click it and Unblock the Notifications