உதயகுமாரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பு போராட்டம்: மூப்பனார் பேரவை
சிதம்பரம்: கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்று மூப்பனார் பேரவை முடிவு செய்துள்ளது.
சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கூடங்குளம் விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம் வருமாறு,
கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிபுணர் குழுவும், நீதிமன்றமும் ஆய்வு செய்து அது பாதுகாப்பானது என்று தெரிவித்ததுடன் அணு உலையில் எரிபொருள் நிரப்பி மின் உற்பத்தியைத் துவங்கலாம் என்றும் கூறியது. முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் உள்பட பல விஞ்ஞானிகள் கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிவித்தனர்.
இந்நிலையில் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவ்வாறு உதயகுமாரை கைது செய்யாவிட்டால் சிதம்பரம் காந்தி சிலை அருகே மூப்பனார் பேரவை நிர்வாகிகள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications