ஆடு மேய்க்கப் போன இடத்தில் 'அதுக்குக்' கூப்பிட்ட கணவர்.. மறுத்ததால் மனைவியை வெட்டினார்!

Subscribe to Oneindia Tamil

காட்பாடி: ஆடு மேய்க்கப் போன இடத்தில் மனைவியை உறவுக்கு அழைத்தார் 60 வயதான கணவர். ஆனால் மனைவி மறுக்கவே கோபத்தில் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்மணிக்கு வயது 52 ஆகிறது. அவரது பெயர் லலிதா. இவரும், இவரது கணவர் சின்னக் கண்ணனும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பனமடங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சம்பவத்தன்று காட்டுப் பகுதிக்கு கணவனும், மனைவியுமாக ஆடு மேய்க்க சென்றனர்.

போன இடத்தில் மனைவியுடன் உல்லாசமாக இருக்க விரும்பினார் சின்னக் கண்ணன். ஆனால் வெட்ட வெளியில் எப்படி என்று தயங்கிய லலிதா மறுத்து விட்டார். பலமுறை அழைத்தும் மனைவி வராததால், கோபமடைந்தார் சின்னக் கண்ணன்.

இதையடுத்து தனது கையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் மார்பு, மர்மப் பகுதி ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி வெட்டினார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் லலிதா.

உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லலிதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்னக் கண்ணனை போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+