மக்கள் உணர்வுகளை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்: உதயகுமார் பேட்டி

நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே கூத்தங்குழியில் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் அந்த கிராமத்தில் இருக்கும் பங்குதந்தை வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் வந்தார். அவரை தமிழக எல்லையான களியக்காவிளையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஜனநாயக நாடா என்ற சந்தேகம் எழுகிறது. எங்கள் போராட்டத்திற்கு கேரளாவிலும் ஆதரவு பெருகி உள்ளது. அங்குள்ள பலரும் எங்களை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 10ம் தேதி நடந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி காணாமல் போய் விட்டதாகவும், அதனை இடிந்தகரையைச் சேர்ந்த ஒருவர் எடு்த்து வைத்திருப்பதாகவும் அதைத் தேடி போலீசார் வர உள்ளதாகவும் செய்திகளை பரப்புகின்றனர். அந்த கலவரத்தின்போது பொதுமக்களின் உடைமைகள், பைபர் படகுகள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனைப் பற்றி பேசாமல் இத்தனை நாட்கள் கழித்து துப்பாக்கி காணாமல் போய்விட்டது என்று வீண் வதந்தி பரப்புவதை போலீசார் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த ஊர்களில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டால் கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளை உணர்ந்து முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் எங்களை பேச அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications