நைஜீரியாவில் கோதுமை மாவு லாரி, பஸ் பயங்கர மோதல்: 30 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அபுஜா: நைஜீரியாவில் கோதுமை மாவு ஏற்றிச் சென்ற லாரி பேருந்தின் மீது மோதியதில் 30 பேர் பலியாகினர்.

நைஜீரியாவின் தெற்கு மாநிலமான ஒகுனில் கோதுமை மாவு ஏற்றிச் சென்ற லாரியும், பேருந்தும் ஓட்-சகமு நெடுஞ்சாலை அருகே செல்கையில் பயங்கரமாக மோதியது. இதில் 30 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சகமுவில் உள்ள பொது மருத்துவமனை உள்பட 2 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் பிணக்கிடங்கில் வைக்கட்டுள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பேருந்தில் பயணம் செய்தவர்கள் தான் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களால் நைஜீரியாவில் நூற்றுக்கணக்கானோர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+